எங்களின் சேவைகளை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்தோம். அந்தப் பதிவுகளைப் பார்த்து திரு. கார்த்திக் அவர்கள் உதவிக்கரம் நீட்டினார். அவர் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கி, அவற்றை தேவையுள்ள மக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு ஊக்கமளித்தார். இதைப் பார்த்து பலரும் உதவ முன்வந்தனர்.
