Our mission is to inspire positive change, support the underprivileged, and create a better future for all.
நாங்கள் யார்
நம்முடைய அறக்கட்டளையின் (Trust) நோக்கமே 'சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் எங்கள் முயற்சி' என்பதுதான். அதாவது, இது நட்பு ரீதியாக வளர்ந்த ஒன்றாகும். நாங்கள் அனைவரும் நண்பர்களாக இருந்தோம்; எதையாவது சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம்.
ஆரம்பத்தில் சிறிய விஷயங்களுடன் தொடங்கினோம். உதாரணமாக, புத்தாண்டு பிறப்பின் போது மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கிப் புத்தாண்டைக் கொண்டாடுவதாக இருக்கட்டும், அதனைத் தொடர்ந்து சில சிறிய செயல்பாடுகளைச் செய்தோம்.
பின்னர், முதன்முதலில் நம் தெருவில் உள்ளவர்களுக்காகப் பொங்கல் விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கினோம். எல்லோரையும் விளையாட வைக்க வேண்டும், அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காகப் பொங்கல் விளையாட்டுப் போட்டிகளை நடத்தினோம்.
அப்படியே ஒவ்வொன்றாகத் தொடங்கி, இறுதியாகத் தேசியக் கொடி ஏற்றுவதைச் செய்தோம். சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய இரு நாட்களின் சிறப்பையும் நம் பகுதியில் உள்ள மக்களுக்குத் தெரியப்படுத்தி, அவர்களிடையே நாட்டுப்பற்றை வளர்க்க வேண்டும் என்பதற்காக அதனைச் செய்தோம்.
அதன் பிறகு, ஒவ்வொரு சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தின் போதும் மருத்துவ முகாம்களை நடத்தினோம். முதன்முதலில் இரத்தச் சர்க்கரை (Blood Sugar) மற்றும் இரத்த அழுத்தம் (Blood Pressure) ஆகியவற்றைக் கண்டறியும் முகாம்களை நடத்தினோம்.
அதற்கு அடுத்ததாகக் கண் சிகிச்சை முகாமும், அதனைத் தொடர்ந்து பொது மருத்துவ முகாமும் நடத்தினோம். பின்னர் பல் மருத்துவத்திற்காக மட்டும் தனியாக ஒரு முகாம் நடத்தியிருந்தோம்.
இப்படி ஒவ்வொரு காரியத்தையும் செய்யும்போது, பொதுமக்களுக்குத் தேவையான அனைத்துச் செயல்பாடுகளையும் முன்னெடுத்தோம். மேலும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத் தீயணைப்புத் துறையினரை அழைத்து வந்து விழிப்புணர்வு முகாம்களையும் நடத்தினோம்."
SATISFACTION GUARANTEED
கல்வி, விளையாட்டு மற்றும் நல்லொழுக்கம் ஆகிய மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு, மாணவர்கள் தீய பழக்கங்களிலிருந்து விலகி, தன்னம்பிக்கையுடன் வளர்ந்து, ஒரு நல்ல சமூகத்தை உருவாக்கும் பொறுப்புள்ள குடிமக்களாக உருவாக வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.
இந்த உயரிய நோக்கத்துடன், அனைவரையும் எங்களுடன் இணைந்து பயணிக்க அன்புடன் வரவேற்கிறோம்.யையும், தன்னார்வலர்களின் ஆதரவையும் பெற்று, இன்று லவ்லி ப்ரெண்ட்ஸ் சேரிட்டபிள் அறக்கட்டளை ஒரு முன்னோடியான சமூக அமைப்பாக வளர்ச்சி பெற்றுள்ளது.
இன்று, மாணவர்களின் கல்வி, விளையாட்டு, சமூக விழிப்புணர்வு மற்றும் மனிதநேயப் பணிகளை மையமாகக் கொண்டு செயல்படும் அமைப்பாக, *"சிறந்த மாணவர்கள் உருவானால், சிறந்த சமுதாயம் உருவாகும்"* என்ற இலட்சியத்துடன் பயணித்து வருகிறது.
வாடிக்கையாளர் கருத்துகள்
அறக்கட்டளைப் பதிவுப் படிவங்கள்
சமூக நலன் மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் பின்தங்கிய நிலையில் உள்ள தனிநபர்கள் மற்றும் சமூகங்களுக்கு ஆதரவளித்து, நேர்மறையான சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும்.