அந்த இக்கட்டான சூழ்நிலையில், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டோம். சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், சுகாதார நடைமுறைகளை கடைபிடித்தல் போன்றவற்றை வலியுறுத்தினோம். மேலும், கிருமிநாசினி மற்றும் நிலவேம்பு கசாயம் போன்றவற்றை வழங்கி, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் முயற்சிகளையும் மேற்கொண்டோம்.
